2 outlets covered this

திரேஸ்புரத்தில் கேரை மீன்கள் வரத்து அதிகரிப்பு

How outlets told it

Dinamani6538h ago

திரேஸ்புரத்தில் கேரை மீன்கள் வரத்து அதிகரிப்பு

Read at Dinamani
Dinamani6530h ago

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 13 நிலவரம்!

Read at Dinamani
Dinamani6523h ago

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப்.13 மாலை நிலவரம்!

Read at Dinamani
Dinamani657h ago

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 14 நிலவரம்!

Read at Dinamani
திரேஸ்புரத்தில் கேரை மீன்கள் வரத்து அதிகரிப்பு
Photo: Dinamani

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை, கேரை மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

திரேஸ்புரம் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின. மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதும், விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ. 1,200, நண்டு ரூ. 800, ஊளி, பாறை, விளை உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ. 400 முதல் ரூ. 450 வரை விற்பனையாகின. கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கேரை மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. கிலோ ரூ. 300 வரை விற்பனையானதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.