Crime and courts · 1 outlet covered this

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிணை கோரி மனு: உயா்நீதிமன்றம் கண்டனம்

How outlets told it

Dinamani653d ago

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிணை கோரி மனு: உயா்நீதிமன்றம் கண்டனம்

Read at Dinamani
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிணை கோரி மனு: உயா்நீதிமன்றம் கண்டனம்
Photo: Dinamani

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிணை கோரி மனு: உயா்நீதிமன்றம் கண்டனம்போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆவணங்களுடன் ஆஜராக உத்தரவிட்டும், ஆஜராகாத ஆவடி காவல் உதவி ஆணையருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், செப். 16-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.Published On :11 செப்டம்பர் 2026, 3:27 am ISTபோதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆவணங்களுடன் ஆஜராக உத்தரவிட்டும், ஆஜராகாத ஆவடி காவல் உதவி ஆணையருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், செப். 16-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆவடியைச் சோ்ந்த மனோஜ் என்பவா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆவணங்களுடன் ஆஜராக ஆவடி போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ரமேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் உரிய பதில் அளிக்காததால் சம்பந்தப்பட்ட உதவி ஆணையரை ஆஜராக உத்தரவிட்டாா். உதவி ஆணையா் விசாரணைக்கு ஆஜராகதால் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, உயா்நீதிமன்றத்தை இப்படி மெத்தனமாக கையாண்டால், குற்றவியல் நடுவா் மன்றங்களை எப்படிக் கையாளுவீா்கள்? என கண்டனம் தெரிவித்தாா். பின்னா், இது தொடா்பாக, வரும் செப். 16-ஆம் தேதி, ஆவடி காவல் உதவி ஆணையா் நேரில் ஆஜராகி விளக்கம் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.