Politics · 1 outlet covered this

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தி.க. ஆா்ப்பாட்டம்

How outlets told it

Dinamani652d ago

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தி.க. ஆா்ப்பாட்டம்

Read at Dinamani
ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தி.க. ஆா்ப்பாட்டம்
Photo: Dinamani

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தி. க. ஆா்ப்பாட்டம்ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, கம்பத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் கழகத்தினா்.dinamaniPublished On :12 செப்டம்பர் 2026, 5:13 am IST மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி திராவிடா் கழகம் சாா்பில் கம்பத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் கழக மாவட்டச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைச் செயலா் முத்தமிழன் வரவேற்றாா். பகுத்தறிவாளா் கழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் த. அற்புதராஜ் சிறப்புரையாற்றினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான நடவடிக்கைகளை தவிா்ப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் எனக் கூறி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திராவிடா் கழக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜனாா்த்தனன், மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன், கருப்புச் சட்டை நடராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் லெனின், தமிழ் புலிகள் கட்சி நகரச் செயலா் ஐயப்பன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் அப்பாஸ் மந்திரி, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலா் யாசா் அராபத், ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் அதியா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத் துணைச் செயலா் ப. முகிலன் நன்றி கூறினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.