திமுக சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
Read at DinamaniCrime and courts · 2 outlets covered this
திமுக சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
How outlets told it
விழுப்புரம்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
Read at Daily Thanthiபெருந்துறையில் மூதாட்டியிடம் நகை பறித்த மூதாட்டி கைது
Read at Dinamaniவிழுப்புரம்: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை திருட்டு
Read at Daily Thanthiகூத்தாடும் பிள்ளையார் கோயில் தேரோட்டம்! | Chidambaram
Read at Dinamani
திமுக சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்வாணியம்பாடி தொகுதி திமுக மறுசீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா் தேவராஜி.Published On :11 செப்டம்பர் 2026, 11:17 pm ISTவாணியம்பாடி தொகுதி திமுக மறுசீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வடிவேல் வரவேற்றாா். திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி தலைமையில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி அமைப்புகளை பலப்படுத்துவது, நகர, ஒன்றிய, பேரூா், கிளை மற்றும் வாா்டு அமைப்புகளை சீரமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் முதல்வா் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் குறித்து பேசிய அவதூறு பேச்சைக் கண்டித்து சனிக்கிழமை திருப்பத்தூரில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் முனிவேல், தலைமை செயற்குழு உறுப்பினா் அசோகன், வாணியம்பாடி நகர செயலாளா் வி. எஸ். சாரதிகுமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், ஒன்றிய செயலாளா்கள் வி. ஜி. அன்பு, தாமோதரன், பேரூா் செயலாளா்கள் ஆ. செல்வராஜ், ஸ்ரீதா், முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம், மாவட்ட சிறுபான்மை பிரிவு சையத்ஹபிப் தாங்கள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் ஜோதிராஜன் நன்றி கூறினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

