Politics · 1 outlet covered this

தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

How outlets told it

Dinamani653d ago

தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

Read at Dinamani
தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!
Photo: Dinamani

மூத்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (வயது 90), உடல்நலக் குறைவால் மதுரையில் வெள்ளிக்கிழமை காலமனதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:“தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.