Cinema and entertainment · 1 outlet covered this

ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் - சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!

How outlets told it

The Hindu Tamil6540h ago

ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் - சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!

Read at The Hindu Tamil
ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் - சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!
Photo: The Hindu Tamil

Updated on: 12 Sep 2026, 5:51 pm1 min readலண்டன்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தயப் பாதையில் நடைபெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை (Michelin Le Mans Cup) கார் பந்தயத் தொடரின் 5-வது சுற்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இந்த பந்தயத்தை முதல்வர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உலகளாவிய சுற்றுப் பயணம், கார் பந்தயங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கார் பந்தயத் தொடரில் அஜித் களம் இறங்கியது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. லண்டனில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கக் கோரி, தனது சக நடிகரான தமிழக முதல்வர் விஜய்க்கு அஜித்குமார் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக லண்டன் சென்றார். தமிழ் திரையுலகின் இருபெரும் நட்சத்திரங்களான விஜய்யும் அஜித்தும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக சந்திக்கின்றனர் என்ற செய்தி வெளியானதிலிருந்தே இணையத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு அங்குள்ள வெளிநாடு வாழ் தமிழகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு முதல்வர் விஜய் நேரில் வந்தபோது, அவரை நோக்கி நடிகர் அஜித்குமார் நடந்து வந்தார். அப்போது ஓடிச் சென்று அஜித்தைக் கட்டியணைத்து முத்தமிட்டு முதல்வர் விஜய் தனது அன்பைப் பகிர்ந்துகொண்டார். அஜித்தும் அவரை ஆரத் தழுவி உற்சாகமாக வரவேற்றார். பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்தின் பந்தயக் காரின் மீது அமர்ந்து முதல்வர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.44 பந்தயக் கார்கள் பங்கேற்ற இந்த சர்வதேச கார் பந்தயத் தொடரைத் தமிழக முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முதல்வர் விஜயுடன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். பந்தயத்தைக் காணவும், களம் காணும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் நடிகைகள் திரிஷா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு நேரில் வருகை தந்திருந்தனர்.