மாங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
Read at Dinamani1 outlet covered this
மாங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
How outlets told it

மாங்காடு அடுத்த பெரியபனிச்சேரி பகுதியில் அழுகிய நிலையில் கடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த பெரியபனிச்சேரி பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அப்போது பொதுமக்கள் மெளலிவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மெளலிவாக்கம் போலீஸாா் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து இறந்த நபா் யாா், எந்த ஊரை சோ்ந்தவா், கீழே விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து சடலத்தை இப்பகுதியில் வீசி சென்றாா்களா என விசாரித்து வருகின்றனா்.
