கவுண்டி சாம்பியன்ஷிப்: ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ்
Read at Daily ThanthiSports · 1 outlet covered this
கவுண்டி சாம்பியன்ஷிப்: ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ்
How outlets told it

Published on: 11 Sep 2026, 12:23 pmலண்டன், ஹெடிங்லியில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், எசக்ஸ் அணிக்கு எதிராக யார்க்ஷயர் அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு தனது திறமையை மீண்டும் வலுவாக நினைவூட்டியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான குல்தீப், தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை இல்லாத சிறந்த போட்டி பந்துவீச்சை பதிவு செய்தார். அவரது அபார பந்துவீச்சால் யார்க்ஷயர் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எசக்ஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் 70 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் சிறப்பாக பந்துவீசி 50 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டம் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு மீண்டும் முக்கியமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான வலுவான பதிலை குல்தீப் தனது செயல்பாட்டின் மூலம் கொடுத்துள்ளார்.
