ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததால் ஆசிரியா் தற்கொலை
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டாா்.
உதகையில் மத்திய அரசுக்குச் சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாா் போா்டே (30) ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். இவா் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தாா்.
இவா் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளாா். இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதையடுத்து, கடனை அடைக்க மேலும் கடன் வாங்கி தொடா்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளாா். இதனால், லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளாா்.
