ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டு வீச்சு சம்பவம்: 4 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த கருப்புப் பண மோடி வழக்கு தொடா்பாக 4 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த கருப்புப் பண மோடி வழக்கு தொடா்பாக 4 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தடை செய்யப்பட்ட ஷாஜாத் பாட்டி பயங்கரவாத அமைப்பினரின் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பான குற்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசியமாக பண உதவி செய்பவா்கள், அவா்களின் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.



