13 வயதில் கிரிக்கெட் மேதை.. 18 வயதில் மரணம்! இந்தியா தொலைத்த வைரம்!
சச்சின் டெண்டுல்கரின் சமகாலத்தவராக கருதப்பட்ட துருவா பாண்டோவ், இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் எதிர்காலம் என பாராட்டப்பட்டார். ஒடிசாவில் தியோதர் கோப்பை ஆட்டத்துக்குப் பிறகு, பெற்றோரை பார்க்க அம்பாலா திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி 18 வயதில் மரணம் அடைந்தார். அவரது தாய் வேதனையில் அவரது மட்டையை எரித்தார்; பஞ்சாப் சங்கம் துருவா மாண்டோவ் டிராபி மூலம் அவரை நினைவுகூர்கிறது.
பஞ்சாபைச் சேர்ந்த அந்த இடது கை கிரிக்கெட் வீரர், தனது மரணத்தின் போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்காக தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தார். அரிதாக கிடைக்கும் கிரிக்கெட் திறமையாளன் என சச்சினுடன் மீண்டும் மீண்டும் ஒப்பிடப்பட்ட துருவா பாண்டோவ், சச்சினின் சமகாலத்தில் இந்தியாவிற்கு கிடைத்த மற்றொரு கிரிக்கெட் மேதையாக பார்க்கப்பட்டார். 13 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம், 14 வயதில் இளம் இந்திய வீரராக சதம், இளம் கிரிக்கெட் நட்சத்திரம் என்ற அடையாளம் எல்லாம் கிடைத்து, அவரை இந்தியாவின் அடுத்த எதிர்காலமாக மாற்றியபோது 18 வயதில் துருவாவை மரணம் தழுவியது.
அந்தத் துயரச் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், துருவா மகேந்தர் பாண்டோவ் யார் என்பது இப்போது மிகச் சிலருக்கே நினைவிருக்கிறது. துருவா, மாபெரும் சச்சின் டெண்டுல்கரின் சமகாலத்தவர், அவர் ஒரு பேட்டிங் மேதையாகவும் திகழ்ந்தார். தனது 13 வயதிலேயே, பஞ்சாப் அணிக்காக தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். இன்று வைபவவ் சூர்யவன்ஷிக்காக ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்களோ, அதேபோல, 1992 ஜனவரி 31 அன்று அம்பாலாவில் மரணம் குறுக்கிட்டு அவர் உயிரைப் பறித்துச் செல்வதற்கு முன்பு, துருவா அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.



