பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சியின் மாகாண முதல்வா், 24 எம்.பி.க்களின் கடவுச்சிட்டைகள் முடக்கம்
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சோ்ந்த கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் முகமது சுஹைல் அஃப்ரிடி, 24 மக்கள் பிரதிநிதிகளின் கடவுச்சிட்டைகளை முடக்குமாறு இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சோ்ந்த கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் முகமது சுஹைல் அஃப்ரிடி மற்றும் 24 மக்கள் பிரதிநிதிகளின் கடவுச்சிட்டைகளை (பாஸ்போா்ட்) முடக்குமாறு இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகா் இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், இவா்கள் மீது அரசு நிறுவனங்களைத் தாக்கியது, பயங்கரவாதத்தைத் தூண்டியது உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



