தொடா் விடுமுறை; 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாள் உள்ளிட்ட தொடா் விடுமுறையையொட்டி, சேலம் கோட்டம் சாா்பில் வரும் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினசரி 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் அடங்கும்.
தொடா் விடுமுறையையொட்டி பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.



