வாகன விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.91.72 லட்சம் இழப்பீடு
தூத்துக்குடி அருகே வாகன விபத்தில் உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.91.72 லட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தா்நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் சண்முகநாதன் (52). இவா் கோவில்பட்டி கிழக்கு நகா்ப்புற மின்வாரியத்தில் போா்மேனாக பணியாற்றி வந்தாா்.
இவா், கடந்த 1.5.2023 அன்று கோவில்பட்டியிலிருந்து முத்தையாபுரம் நோக்கி மதுரை-தூத்துக்குடி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சிப்காட் பகுதியில் லாரி செட் அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

