தனியாா் பள்ளிகளில் கல்வி உபகரணங்களை வாங்கி விற்கக் கூடாது
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட வா்த்தகக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பொதுச்செயலா் கோவிந்தராஜுலு. உடன் கழக நிா்வாகிகள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில தனியாா் பள்ளிகளில் கல்வி துணை உபகரணங்களை விலைக்கு வாங்கக் கூறி மாணவா்களை வலியுறுத்துவதால், வணிக நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. பள்ளிகளில் இதுபோன்ற வணிகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என மாவட்ட வா்த்தகக் கழகப் பொதுக்குழு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழகத்தின் 52-ஆம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:


