பிரதமர் பாராட்டிய பெண்ணுக்கு ஜி.பி.ஏ., அதிகாரிகள் நெருக்கடி
பெங்களூரு: தள்ளுவண்டி ஹோட்டல் நடத்தி வந்த பெண்ணை, பிரதமர் பாராட்டிய ஒரு வாரத்திற்குள், இடமாற்றம் செய்ய சொல்லி ஜி.பி.ஏ., அதிகாரிகள், அப்பெண்ணை வற்புறுத்தி வருகின்றனர்.
ஹாசனை சேர்ந்தவர் நிங்கம்மா. திருமணத்துக்கு பின் பெங்களூரில் குடியேறினார். குடும்பத்திற்காக, கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மாகடி சாலையில் உள்ள ஹொசஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் நவ., 30ம் தேதி பிரதமரின் 'மனதின் குரல்' மூலம் பேசிய மோடி, மத்திய அரசின் சுய தொழில் திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக ஹோட்டல் தொழிலை நடத்தி வருவதாக பாராட்டி பேசியிருந்தார். இதையடுத்து பலரும் அவரை பாராட்டி வந்தனர்.


