விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் தடுக்க போலீஸ் நடவடிக்கை
மாண்டியா: ''விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படாமல் தடுப்பதை அனைத்து போலீசாரும் உறுதி செய்ய வேண்டும்,'' என, மாவட்ட எஸ்.பி., ஷோபாராணி தெரிவித்தார்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் 2024ல் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மத ரீதியான கலவரம் ஏற்பட்டது. இதில், ஏராளமான கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இச்சம்பவம் மாநிலத்தில் பெரிதாக பேசப்பட்டது. இது போன்ற சம்பவம் வரும் விநாயகர் சதுர்த்தியின் போது ஏற்படக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து உள்ளனர்.

