கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு முடித்துவைப்பு
திண்டுக்கல்லில் பழைமையான கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான காளஹஸ்தீசுவரா் அபிராமி அம்மன் கோயில் உள்ளது. பழைமையான இந்தக் கோயிலில் உள்ள சிலைகள், கல்வெட்டுகள், சிற்பங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

