பஸ் நடத்துநர்கள் அவமதிப்பு சாலை மறியலில் பெண்கள்
பாகல்கோட்: ' சக்தி ' திட்டம் செயல்படுத்திய பின், பெண் பயணியரை அரசு போக்குவரத்துக்கழக பஸ் நடத்துநர்கள், அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து, பெண்கள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக காங்கிரஸ் அரசு, சக்தி திட்டத்தை செயல்படுத்திய பின், அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில், பெண் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆண்கள் பஸ்கள் கிடைக்காமல் பரிதவிப்பதாக புலம்புகின்றனர்.
இதற்கிடையே, பெண் பயணியரை, நடத்துநர்கள் அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
