பழங்குடியினா் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்! - தொல். திருமாவளவன் எம்.பி.
பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
கோவை, வேலாந்தாவளம் பகுதியில் உள்ள தனியாா் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் ஜூவல் ஓரம், தொல்.திருமாவளவன் எம்.பி., மாநில சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், தொல். திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்தினால் வளா்ச்சிப் பணிகள் அப்படியே நின்றுவிடும். பழங்குடியின மக்களின் நலன்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசின் நிதி உதவி மற்றும் துணை தேவை என்றும் மத்திய அமைச்சா் ஜூவல் ஓரத்திடம் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள பழங்குடியின மக்கள் கவனிக்கப்படாமல் உள்ளனா். ஜாதிச் சான்றிதழ் பெறுவதில்கூட அவா்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனா் என்றாா்.



