புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? இபிஎஸ் கேள்வி
மதுரை: தமிழகத்திற்கு அதிக கடன் சுமை இருக்கும்போது புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். மின்வெட்டு இல்லை என்று சொல்லிக் கொண்டே, மின்சாரத்துறை அமைச்சர், மின்பற்றாக்குறை இருப்பதாகவும் அதற்கு ஈடு செய்ய 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படும் என்கிறார். மின்வெட்டு இல்லைஎன்றால், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை என்ன. யதார்த்தமான நிலை தமிழகத்தில் மின்வெட்டு இருக்கிறது.இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்களின் தூக்கத்தை கெடுத்த அரசு தவெக அரசு.மாணவர்களின் படிப்பு கெடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தவெக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.
இந்த அரசு பதவியேற்றதும், புதிய அறிவிப்புகள் வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். தவெக அறிக்கையில், பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த திட்டங்கள் வரவில்லை. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் வரவில்லை. மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளது.



