ஈசன் அம்பிகையைத் திருமணம் செய்துகொண்ட தலத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்... திருமணம் கைகூடும்!
திருமண வரம் அருளும் சுயம்வரபார்வதி ஹோமம் குத்தாலம் அருள்மிகு உக்த வேதீஸ்வரர் திருக்கோயிலில் 13.9.26 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வாசகர்கள் கலந்துகொண்டு சங்கல்பம் செய்து வழிபடலாம்.
ஒவ்வோர் ஆலயத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில கடன் பரிகாரத்தலமாகத் திகழும். சில செல்வ வளம் அருளும். ஒருசில நோய் தீர்க்கும் தலமாகத் திகழும். சில தலங்கள் திருமண வரம் தரும் தலங்களாக அறியப்படும். அப்படித் திருமண பரிகாரத்தலமாக விளங்கும் தலம்தான் குத்தாலம் ஸ்ரீஉக்தவேதீஸ்வரர் ஆலயம். இங்கு ஈசன் பரதமுனிவரின் மகளாகப் பிறந்த பார்வதி தேவியைத் திருமணம் செய்துகொண்டார் என்கிறது தலபுராணம்.
பொதுவாக தெய்வத் திருமணங்கள் அனைத்துமே பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக நிகழ்ந்த திருவிளையாடல்கள்தான். அவ்வாறு இத்தலத்தில் நிகழ்ந்த திருக்கல்யாணமும் உலகம் உய்ய நிகழ்ந்த அருளாடலே. எனவே இந்தத் தலம் வந்து ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


