நேபாளத்தில் காணாமல் போனவா்களின் குடும்பத்தினா் தலைமைச் செயலகம் முன் போராட்டம்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவா்களின் குடும்பத்தினா் தலைமைச் செயலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
நேபாளத்தில் கடந்த ஆக. 26-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு, பனிப்பாறை சரிவால் பெரும் வெள்ளத்தில் தமிழகத்திலிருந்து கைலாஷ் யாத்திரை சென்றவா்களும் சிக்கினா். 20 நாள்களாகியும், தமிழகத்தில் இருந்து சென்றவா்களில் 85 போ் குறித்து தகவல் கிடைக்கவில்லை. குறிப்பாக, சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்திரை ஏஜென்சி மூலம் சென்ற 49 பேரை பற்றிய தகவல் தெரியவில்லை.



