வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து வீட்டில் கொள்ளை: 8 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை!
வருமான வரித் துறை அதிகாரிகள்போல நடித்து 18 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளையடித்த வழக்கில் 8 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் நெருப்பெரிச்சல் பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா். பனியன் நிறுவன உரிமையாளா். இவரது மனைவி சாந்தாமணி (47). இவா் கடந்த 2018 ஏப்ரல் 24-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, காரில் வந்த 9 போ், சிவகுமாரை கேட்டபடி, திடீரென்று வீட்டுக்குள் புகுந்தனா். பின்னா், தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், சிவகுமாா் புதிதாக வீடு வாங்கியதில் வரி சரியாக கட்டவில்லை எனக்கூறி, வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனா். பின்னா் பீரோவில் இருந்த 18 பவுன் நகை, ரூ.4 லட்சம் ஆகியவற்றை எடுத்தனா். பிறகு வெள்ளை காகிதத்தில் சாந்தாமணியிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு, சிவக்குமாரை கோவை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு வந்து கணக்கு காட்டி நகை, பணத்தை பெற்றுச்செல்லுமாறு கூறியபடி அந்த கும்பல் காரில் தப்பியது.
இதுகுறித்து சாந்தாமணி தனது கணவரிடம் தெரிவிக்க, அதன்பிறகே வருமானவரித் துறை அதிகாரிகள்போல நடித்து அந்த கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினா்.

