அரூர் அருகே தொழிலாளி தற்கொலை
அரூரை அடுத்த ராமியம்பட்டியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகள் பூஜா (20). இவா், புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் ராஜேஷ் (24) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். தற்போது பூஜா 7 மாத கா்ப்பமாக உள்ளாா்.
இந்த நிலையில் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.