தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரி தொமுச ஆா்ப்பாட்டம்
கடலூா் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொமுசவினா்.
தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் (தொமுச) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சிறப்புத் தலைவா் பி. பழனிவேல் தலைமை வகித்தாா்.


