உலக ஆய்வக வைர சந்தையை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும்
உலக அளவில், ஆய்வக வைர சூழல் அமைப்பை இந்தியர்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பு மற்றும் திறன் நம்நாட்டில் உள்ளது. சூரத், மும்பை இதை நிரூபித்துள்ளது. தற்போதைய வைர சந்தை, 50 மடங்கு விரிவடையக்கூடும் என்பதால், மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன.
ஆய்வக வைர தோற்றுவிப்பு நாடாக இந்தியா உள்ளது. எனவே, நம் பிராண்டுகள் உலக பிராண்டுகளாக வேண்டும். உலக நாடுகளில் ஷோரூம்கள் அமைக்க வேண்டும்.
-அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்.
