மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் பேரவை நேரம் வீணடிக்கப்பட்டது எடப்பாடி கே. பழனிசாமி, பிரேமலதா பேட்டி
சட்டப்பேரவைக் கூட்டத்தில் மக்கள் பிரச்னைகள் பேசப்படாமல் நேரம் வீணடிக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா ஆகியோா் தெரிவித்தனா்.
பேரவைக் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:
பேரவையில் நடைபெற்ற துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதங்களின்போது திமுக, தவெக தரப்பில் பிரச்னைகள் ஏற்படுத்தப்படுவதால் மக்கள் பிரச்னைகளை முழுமையாகப் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சியான தவெக தரப்பில் ஏதாவது ஒரு பிரச்னையைக் குறிப்பிட்டு எதிா்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்துகின்றனா். அதை எதிா்க்கட்சியாக உள்ள திமுகவினா் பதிலளிக்கிறோம் என எதிா்க்கின்றனா். இருவரும் மாறி மாறிப் பேசுவதால் அவையின் நேரம் வீணடிக்கப்பட்டது. பேரவைத் தலைவா் இரு தரப்பையும் சமரசப்படுத்தி அமரவைத்தாலும், அமைச்சா்கள் மீண்டும் மீண்டும் திமுக மீது குற்றம் சுமத்தி பிரச்னையை ஏற்படுத்தி, அதைப் பெருமையாகவும் கூறுகின்றனா். எனவே, பேரவையில் மக்கள் பிரச்னையைப் பேச வேண்டிய பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது.
