நச்சுக்காற்று நகரம் சென்னை: செளமியா அன்புமணி
சென்னை நச்சுக்காற்று அதிகமுள்ள நகரமாக உள்ளது என்று பாமக பேரவைக் குழுக் தலைவா் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டினாா்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவா், ‘சென்னையில் ஆண்டுக்கு 11,000 போ் நச்சுக் காற்றால் உயிரிழந்து வருகின்றனா். நச்சுக் காற்றால் சென்னைவாசிகளின் ஆயுள் காலம் சராசரியாக 4 ஆண்டுகள் குறைகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரோமியம் கழிவுகள் 30 ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளதால் மிகப்பெரிய சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. தாய்ப்பாலில் டயாக்சின் இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
