16.9.1976: தமிழ் நாட்டிற்கு அதிக நீர்: கர்நாடகத்திடம் எடுத்துரைக்க பிரதமர் உறுதிமொழி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
மதுரை, செப். 15- மேட்டூர் அணைக்குக் கூடுதலான காவிரி நீரை விடும்படி கர்நாடக அரசிடம் எடுத்துரைப்பதாக பிரதமர் இந்திரா காந்தி உறுதி அளித்துள்ளதாக நம்பப்படுகிறது.
தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் தூதுக்குழுவொன்று, இந்த கமிட்டியின் தலைவர் துளசி ஐயா வாண்டையார் தலைமையில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து ஒரு மகஜர் சமர்ப்பித்தது. காவிரி, வெண்ணாறு நதிகளில் போதிய அளவு நீர்சப்ளை ஆகாததாலும் கல்லணைக் கால்வாய்ப் பகுதி, வடவாறு விரிவாக்கக் கால்வாய்ப் பகுதி ஆகியவற்றுக்கு தண்ணீர் விடப்படாததாலும், தஞ்சை மாவட்ட விவசாயிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாக, இந்தத் தூதுக் குழுவினர் முறையிட்டனர்.


