தில்லி பொதுப்பணித்துறைக்கு தனிப் பொறியியல் பிரிவு: ஒப்புதலளித்த பிரதமருக்கு தில்லி முதல்வா் நன்றி
தில்லி அரசின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா வியாழக்கிழமை பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தாா்.
தலைநகரில் பொதுப்பணித் துறையின் பணியாளா்களை வலுப்படுத்துவதையும், உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அத்துறைக்கென ஒரு தனிப் பொறியியல் பிரிவை உருவாக்கும் தில்லி அரசின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா வியாழக்கிழமை பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தாா்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், பொதுப்பணித் துறைக்கென ஒரு தனிப் பொறியாளா் பணியிடம் வேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நிலுவையில் இருந்து வந்ததாக குப்தா கூறினாா்.



