விநாயகா் சிலைகள் விற்பனை தீவிரம்
வீட்டில் வைத்து வழிபடும் வகையில் களி மண்ணில் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள் நகரப் பகுதியில் தீவிரமாக விற்பனை செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. களி மண்ணில் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வாங்கிவந்து வீட்டில் மக்கள் வழிபாடு நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.
இதன்படி, காரைக்கால் நகரப் பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறிய அளவில் அச்சில் தயாரிக்கப்பட்ட களிமண் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டன.






