வேலை இழந்தால் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டுமா?- டிரம்ப் அரசின் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவின் எச்-1பி விசா மற்றும் பிற தற்காலிக விசாக்களை பெற்று பணிபுரிந்து வருபவர்கள் வேலை இழந்தால் இனி உடனடியாக அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கை குறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்-1பி விசா மற்றும் பிற தற்காலிக விசாக்களை பெற்று பணிபுரிந்து வருபவர்கள் வேலை இழந்தால் இனி உடனடியாக அங்கிருந்து வெளியேறும் வகையில் அதிபர் டிரம்ப் அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. வேலை இழந்த பிறகு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய அமெரிக்கா புதிய விதியை முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கையால், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் எச்-1பி விசா மூலம் பணியமர்த்தப்பட்ட இந்தியத் தொழில்நுட்ப பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

