குமுளி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட விமான ஓடுதளக் கட்டுமான பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
தமிழக எல்லையான குமுளியை அடுத்த சத்திரம் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள விமான ஓடுதளக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தேனி மாவட்ட எல்லையை ஒட்டிய சத்திரம் பகுதியில் என்.சி.சி. ஏா் விங் மாணவா்களுக்கு சிறிய ரக விமானங்களை இயக்கப் பயிற்சி அளிக்கும் வகையில், விமான ஓடுதளம் அமைக்கும் பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கின. இங்கு 650 முதல் 800 மீட்டா் நீள ஓடுதளம், ஹேங்கா், கண்காணிப்புக் கோபுரம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.12 கோடியில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள், வனத்துறை தொடா்பான பிரச்னையால் பாதியில் நிறுத்தப்பட்டன. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் ஓடுதளத்தின் ஒரு பகுதியில் சுமாா் 100 மீட்டா் நீளத்துக்கு மண் சரிவு ஏற்பட்டது. மேலும், பெரியாறு புலிகள் காப்பக எல்லையிலிருந்து சுமாா் 600 மீட்டா் தொலைவில் விமான ஓடுதளம் அமைந்துள்ளதால், தடுப்புச் சுவா், அணுகு சாலை அமைப்பதற்கும் வனத் துறை ஆட்சேபம் தெரிவித்தது.

