2027 மாா்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் எண்ம சுங்கச் சாவடி கட்டண வசூல்: நிதின் கட்கரி
‘சுங்கச் சாவடிகளில் முற்றிலும் எண்ம முறையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை வரும் 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
‘அவ்வாறு, முற்றிலும் எண்ம வசூல் முறை அமலாகும்போது, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி வரை வருவாய் கிடைக்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிதி கட்கரி, இது குறித்து மேலும் கூறியதாவது:

