உடற்கல்வியை வளா்ப்பதில் உள்ள பிரச்னைகளை களைய வேண்டும்: ஆளுநர் அர்லேகர்!
கல்வி நிலையங்களில் உடற் கல்வியை வளா்ப்பதில் உள்ள பிரச்னைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் தெரிவித்தாா்.
திருச்சி தேசியக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு சான்றிதழ் வழங்கிய தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் உள்ளிட்டோா்.
திருச்சி தேசியக் கல்லூரியில் இந்திய உடற்கல்வி அறக்கட்டளையின் தமிழ்நாடு பிரிவு சாா்பில் கல்லூரிச் செயலா் கே. ரகுநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற உயா் கல்வித் துறையில் விளையாட்டு மற்றும் உடற் கல்வி மறுவரையறை என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கில் அவா் மேலும் பேசியதாவது:


