ரூ.25 கோடி கோவில் நிலம் கபளீகரம் : 99 தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றம்
- நமது நிருபர் -சிவகங்கை மாவட்டம், புதுவயல் கிராமத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, 99 பேருக்கு
சிவகங்கை மாவட்டம், புதுவயல் கிராமத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, 99 பேருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா அடுத்த புதுவயல் கிராமத்தில், 150 ஆண்டுகள் பழமையான, கைலாச விநாயகர் கோவிலுக்கு சொந்தமான, 25 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.34 ஏக்கர் நிலம், கிரய பத்திரமே இல்லாமல், 99 பேருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது:இந்த கோவிலுக்கு சொந்தமான, குறிப்பிட்ட பட்டா மற்றும் புல எண்ணில், 6.34 ஏக்கர் நிலம் இருந்தது. 2022 ஜன., 27ம் தேதி, ஒரே நேரத்தில், 99 நபர்கள் தாசில்தாருக்கு மனு அளித்துள்ளனர்.எந்தவொரு செல்லத்தக்க கிரய பத்திரமோ, உரிமை ஆவணமோ இல்லாத நிலையில், ஒருமாத இடைவெளியில், மனு அளித்த அனைவருக்கும் பிப்., 27ல் ஒரே நேரத்தில் கோவில் நிலம் பட்டா மாறுதல் செய்யப்பட்டு, உட்பிரிவும் செய்யப்பட்டுள்ளது.


