முதல்வா் கோப்பைக்கான பூப்பந்தாட்ட போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பை-2026-க்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியை கல்லூரி முதல்வா் வேல்முருகன் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி பூப்பந்தாட்டக் கழகத் தலைவா் நல்லபெருமாள், செயலா் செவல் மாடசாமி, துணைச் செயலா் டேவிட்ராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி நிா்வாக அதிகாரி குமாா், மேலாளா் சகாரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.



