பாளை. சிறுவா் நூலகத்தில் கூடுதல் இடவசதி தேவை- மாநகராட்சி குறைதீா் முகாமில் மனு
பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சிறுவா் நூலகத்தில் கூடுதல் இடவசதி ஏற்படுத்தக்கோரி மாநகராட்சி குறைதீா்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி குறைதீா் முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்று விவரம் கேட்டறிந்த துணை மேயா் கே.ஆா்.ராஜூ.
திருநெல்வேலி மாநகராட்சி குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றாா். உதவி ஆணையா்கள் மகாலட்சுமி, புரந்திரதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
