திருமுல்லைவாயலில் ரூ.3.69 கோடியில் முதல்வர் படைப்பகம்: மாணவர் பயன்பாடு அதிகரிப்பு
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் ரூ.3.69 கோடியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகத்தை மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
திருமுல்லைவாயலில் ரூ.3.69 கோடியில் அமைந்துள்ள முதல்வர் படைப்பகம்
கல்வி மற்றும் மாணவர்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் சோழம்பேடு பகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3.69 கோடியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
