வைகறையில் தொடங்கும் ஒரு வாசகனின் பயணம் - சூ. ஆரோக்கிய புஷ்பராஜ்
(கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்- 2025 ஆண்டுக்கான புனைவிலி(Non-fiction) விருதுக்கு டாக்டர் சங்கர சரவணன் எழுதி, விகடன் பிரசுரம் வெளியிட்ட "வைகறை வாசகன் பதிவுகள்" நூல் தெரிவாகியுள்ளது. அந்நூல் குறித்த வாசிப்பு அனுபவம் இது)
சில புத்தகங்களை நாம் வாசிக்கிறோம். சில புத்தகங்கள் நம்மை வாசிக்க வைக்கின்றன. இன்னும் சில புத்தகங்கள், நாம் எவ்வளவு குறைவாக வாசித்திருக்கிறோம் என்பதை நமக்கே உணர்த்திவிடுகின்றன. டாக்டர் சங்கர சரவணனின் ‘வைகறை வாசகன் பதிவுகள்’ எனக்கு மூன்றாவது வகையைச் சேர்ந்த நூல்.
இந்த நூலை வாசித்து முடித்ததும், ‘இந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டால் பதில் சொல்வது எளிது. கலைச்சொற்கள் இருக்கின்றன;

