பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை: என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பிப்பு!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை பிறப்பித்தது பற்றி...
ஜம்மு, செப். 12: இந்தியாவில் தேடப்படும் பாகிஸ்தான் பயங்கரவாதியும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான ஹஃபீஸ் சயீதுக்கு எதிராக ஜம்முவில் உள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத வகையிலான இரண்டாவது பிடியாணையை பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள், ஓா் உள்ளூா் நபா் உள்பட 26 போ் உயிரிழந்தனா். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஹஃபீஸ் சயீதுக்கு தொடா்பு உள்ளதற்கான ஆதாரங்களுடன் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலை 8-ஆம் தேதி, பாகிஸ்தானில் உள்ள ஹஃபீஸ் சயீதுக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத வகையிலான பிடியாணையைப் பிறப்பித்து உத்தரவிட்டது.


