தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் கட்டி காவேரியில் பெண்ணுக்கு மறுவாழ்வு
சென்னை: தைராய்டு சுரப்பியில் இருந்த புற்றுநோய் கட்டியை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை வழியே அகற்றி, 50 வயது பெண்ணுக்கு, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், மறுவாழ்வு அளித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவைச் சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு, கழுத்து பகுதியில் வீக்கம் இருந்தது. பரிசோதனையில், தைராய்டு சுரப்பியில் உருவாகும் 'பாபில்லரி' எனும் புற்றுநோய் கட்டி என்பது உறுதியானது.
இதையடுத்து, வட பழனி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். பரிசோதனையில், அவரது தைராய்டு சுரப்பியின் இடது பக்கத்தில் இருந்த கட்டி, அதை சுற்றியுள்ள தசைகளுடன் ஒட்டியிருப்பது தெரிந்தது. குரல் எழுப்ப காரணமான நரம்புக்கு மிக நெருக்கமாகவும் இருந்தது.

