போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையவா்களின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
தமிழகத்தில் போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையவா்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.
மத்திய அரசின் ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாகவும், மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ‘போதைப் பொருள் கட்டுப்பாடு தொடா்பான தொலைநோக்குத் திட்டத்தின் கீழும் போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையவா்களின் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது.
அதன்படி, சென்னையில் தங்கியிருந்த இலங்கையைச் சோ்ந்த உதயகுமாா் என்பவரை கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கைது செய்து, விசாரணை செய்தனா்.



