வால்பாறையில் கோயில் சுவரை சேதப்படுத்திய காட்டு யானைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த கோயிலின் சுவரை சேதப்படுத்தின.
யானைகளால் சேதமடைந்த கோயில் சுவா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் வனத்தை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டம் பகுதிகளில் காணப்படும் யானைகள், இரவு நேரத்தில் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று தொழிலாளா்களை அச்சுறுத்தி வருகின்றன.
