கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் திருநங்கைகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் திருநங்கைகள் பணம் பறிப்பது அதிகரித்திருப்பதாகவும், இதற்கு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் வலியுத்தினா்.
பழனி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வருகின்றனா். அப்போது பழனி பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் செல்லும் வழியில் ஏராளமான திருநங்கைகள் பக்தா்களிடம் திருஷ்டி கழிப்பதாகக் கூறி பணம் பறிக்கின்றனா்.
ஒரே பக்தரை திருநங்கைகள் பலா் சுற்றி நின்று அவரது சட்டை பையில் கையை விட்டு பணத்தை பறிக்கின்றனா். இதே பகுதியில் புறக்காவல் நிலையம் இருந்தாலும் காவலா்கள் இதைக் கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.



