குப்பையில் மின்சாரம் தயாரிப்பு வேண்டாம்!: மாநகராட்சி கூட்டத்தில் எதிர்ப்பு
கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த 2 கூட்டங்கள் களேபரமானதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கூட்டம் துவங்கியவுடனே மேயர் ரங்கநாயகி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவுன்சிலர்கள் தங்களின் பிரச்னைகளை முன்பே மனுவாக வழங்க வேண்டும். மேடை அருகே யாரும் வரக்கூடாது. அவரவர் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும் என்றார்.
வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், சிறந்த மாநகராட்சிக்கான விருது நமக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரநிதிகளை அழைத்து விருது கொடுக்காத த.வெ.க. அரசுக்கு கண்டனம் என்றார்.
காங்., கவுன்சிலர்கள் குழு தலைவர் ஜெயபால் எதிர்த்து பேசியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
