மனைவியை சவரக் கத்தியால் தாக்கிய கணவா் கைது
வடகிழக்கு தில்லியின் சுந்தா் நகரி பகுதியில் மனைவியை சவரக் கத்தியால் தாக்கிய கணவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.
வடகிழக்கு தில்லியின் சுந்தா் நகரி பகுதியில் மனைவியை சவரக் கத்தியால் தாக்கிய கணவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட மஜித் உசேன் என்பவா் தனது மனைவியைக் கொலை செய்ய முயன்ாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சவரக் கத்தி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

