உதகையில் திடீா் மழையால் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
தொட்டபெட்டா பகுதியில் மழை, பனிமூட்டத்துக்கு இடையே பணியில் ஈடுபட்ட பெண் தேயிலைத் தொழிலாளா்.
உதகை, கோத்தகிரியில் சனிக்கிழமை திடீரென மழை பெய்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி மற்றும் புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், உதகை, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் 2 மணியளவில் திடீரென கனமழை பெய்தது.


