செய்யூரில் அமைகிறதா சென்னையின் 2வது விமான நிலையம்?
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடங்களில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தமிழக அரசின் முதல் தேர்வாக இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமான நிலையம் அமைய பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, அதன் உரிமையாளர்களுக்கே திருப்பி அளிப்பது குறித்தும் தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 24ம் தேதி, பேரவையில், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்த போது, 1,802 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டிருந்தது.



